பழநி முருகன் கோயில் நவபாஷாண சிலை பத்திரமாக உள்ளது: ஐகோர்ட்டில் அரசுத் தரப்பு தகவல்...
சென்னை: பழநி முருகன் கோயில் நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளதாக ஐகோர்ட்டில் இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. பழநியை சேர்ந்த ஸ்ரீசிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில் பழநி முருகன் கோயில் நவபாஷான சிலை பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய என் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்க வேண்டும். நவபாஷாண சிலையை மாற்றக்கூடாது என்று உத்தரவிடும்படி கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் மீது பல்வேறு கோயில் நிலங்களை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது. மேலும் பழநி மூலவர் சிலையான நவபாஷாண சிலை பத்திரமாக, பாதுகாப்பாக உள்ளதாகவும், அந்த சிலையை மாற்றுவதற்கான திட்டம் ஏதுமில்லை என்றும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: பழநி முருகன் கோயில் நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளதாக ஐகோர்ட்டில் இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. பழநியை சேர்ந்த ஸ்ரீசிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில் பழநி முருகன் கோயில் நவபாஷான சிலை பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய என் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்க வேண்டும். நவபாஷாண சிலையை மாற்றக்கூடாது என்று உத்தரவிடும்படி கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் மீது பல்வேறு கோயில் நிலங்களை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது. மேலும் பழநி மூலவர் சிலையான நவபாஷாண சிலை பத்திரமாக, பாதுகாப்பாக உள்ளதாகவும், அந்த சிலையை மாற்றுவதற்கான திட்டம் ஏதுமில்லை என்றும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
COMMENTS