காவல்நிலையங்களில் புகார்களை ஆன்லைனில் பெறும் வசதி-உயர்நீதிமன்றம் உத்தரவு
புகார்களை 💻ஆன்லைனில் பதிவு செய்ய தேவையான வசதியை அனைத்து காவல் நிலையங்களிலும் 📆6 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என 🏛உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது⚖. காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார் 📜மனுக்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை🚫 எனக் கூறி, 📜மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன😳. இவற்றை விசாரித்த 🏛உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார், கொடுக்கப்படும் புகார்கள் மீது காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தி🙄, டிஜிபி அறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்⚖. தனது சுற்றறிக்கையை பின்பற்றுகிறார்களா🚫 என்பதை குழு அமைத்து 👮டிஜிபி கண்காணிக்க👀 வேண்டும் என்றும், இதுதொடர்பான அறிக்கையை வருகிற 📆ஆகஸ்டு 2 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டிருக்கிறார்😯. மேலும், 👮போலீஸ் விசாரணையின் நிலை குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிவுத் தபால், 💻இமெயில் மற்றும் 📲எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது⚖.
COMMENTS