பொன்னமராவதியில் தாலுகா அலுவலகம் அருகே சார் நிலை கருவூலம் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
பொன்னமராவதியில் ரூ66.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகத்திறப்பு விழா நடைபெற்றது. பொன்னமராவதியில் கடந்த 2014 ல் சார்கருவூலம் துவங்கப்பட்டது. இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்தது. இந்த அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்ட வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் இடம் ஒதுக்ப்பட்டு ரூ66.55லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை தமிழக முதல்வர்; எடப்பாடி பழனிச்சாமி நேற்று 16ம் தேதி சென்னையில் கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து பொன்னமராவதி சார்கருவூல அலுவலகத்தில் மாவட்ட வருவாய்அலுவலர் ராமசாமி, மதுரை கருவூல கணக்குத்துறை மண்டல இணைஇயக்கநர் முத்துப்பாண்டியன், மாவட்ட கருவூல அலுவலர் மூக்கையா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். பின்னர் இனிப்புகள் வழங்கி புதிய கட்டித்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர். உதவிகருவூல அலுவலர் தனபாலன், மாவட்ட உதவி அலுவலர் அண்ணாத்துரை, வட்டாச்சியர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன், கூடுதல் சார்கருவூலஅலுவலர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..
பொன்னமராவதியில் ரூ66.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகத்திறப்பு விழா நடைபெற்றது. பொன்னமராவதியில் கடந்த 2014 ல் சார்கருவூலம் துவங்கப்பட்டது. இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்தது. இந்த அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்ட வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் இடம் ஒதுக்ப்பட்டு ரூ66.55லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை தமிழக முதல்வர்; எடப்பாடி பழனிச்சாமி நேற்று 16ம் தேதி சென்னையில் கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து பொன்னமராவதி சார்கருவூல அலுவலகத்தில் மாவட்ட வருவாய்அலுவலர் ராமசாமி, மதுரை கருவூல கணக்குத்துறை மண்டல இணைஇயக்கநர் முத்துப்பாண்டியன், மாவட்ட கருவூல அலுவலர் மூக்கையா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். பின்னர் இனிப்புகள் வழங்கி புதிய கட்டித்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர். உதவிகருவூல அலுவலர் தனபாலன், மாவட்ட உதவி அலுவலர் அண்ணாத்துரை, வட்டாச்சியர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன், கூடுதல் சார்கருவூலஅலுவலர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..
COMMENTS