தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு
கடந்த 22 நாட்கள் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரும் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், லோக்அயுக்தா மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவையில் மே மாதம் 29-ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை 22 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் இன்று நிறைவடைகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், ஊழலுக்கு எதிரான லோக் அயுக்தா சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்கிறார்.
அதனைத் தொடர்ந்து, இந்த சட்ட மசோதா மீது விவாதம் நடைபெறுகிறது. மசோதா ஒருமனதாக பேரவையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, லோக் அயுக்தா விசாரணை மன்றம் 15 மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்ட நிலையில், 16ஆவது மாநிலமாக தமிழ்நாட்டில் லோக் அயுக்தா சட்டம் நிறைவேற்றப்படுகிறது.
மாநிலங்களில் அரசுத்துறைகளில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை விசாரிக்க சுய அதிகாரம் கொண்ட "லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்" கடந்த 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி, அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கு எதிராக எந்த ஒரு தனிமனிதரும் வழக்கு தொடுக்க முடியும்.
விசாரணையில் அரசு அதிகாரிகளோ அல்லது ஆட்சியாளர்களோ முறைகேடு, ஊழல் செய்தது கண்டறியப்பட்டால் அவர்களின் பதவியை பறிப்பது, கட்டாய ஓய்வு அளிப்பது, சம்பளத்தை நிறுத்தி வைப்பது மற்றும் பணிநீக்கம் செய்தல், சிறை தண்டனை வழங்குவது உள்ளிட்ட வகைகளில் வகைகளில் தண்டிக்கப்படுவார்கள்.
கடந்த 22 நாட்கள் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரும் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், லோக்அயுக்தா மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவையில் மே மாதம் 29-ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை 22 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் இன்று நிறைவடைகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், ஊழலுக்கு எதிரான லோக் அயுக்தா சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்கிறார்.
அதனைத் தொடர்ந்து, இந்த சட்ட மசோதா மீது விவாதம் நடைபெறுகிறது. மசோதா ஒருமனதாக பேரவையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, லோக் அயுக்தா விசாரணை மன்றம் 15 மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்ட நிலையில், 16ஆவது மாநிலமாக தமிழ்நாட்டில் லோக் அயுக்தா சட்டம் நிறைவேற்றப்படுகிறது.
மாநிலங்களில் அரசுத்துறைகளில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை விசாரிக்க சுய அதிகாரம் கொண்ட "லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்" கடந்த 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி, அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கு எதிராக எந்த ஒரு தனிமனிதரும் வழக்கு தொடுக்க முடியும்.
விசாரணையில் அரசு அதிகாரிகளோ அல்லது ஆட்சியாளர்களோ முறைகேடு, ஊழல் செய்தது கண்டறியப்பட்டால் அவர்களின் பதவியை பறிப்பது, கட்டாய ஓய்வு அளிப்பது, சம்பளத்தை நிறுத்தி வைப்பது மற்றும் பணிநீக்கம் செய்தல், சிறை தண்டனை வழங்குவது உள்ளிட்ட வகைகளில் வகைகளில் தண்டிக்கப்படுவார்கள்.
COMMENTS