2400க்கும் அதிகமான IAS, IPS பதவியிடங்கள் காலியாக உள்ளன - ஜிதேந்திரசிங் தகவல்
_*🔹🔹இந்தியாவில் 2400க்கும் அதிகமான ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் எழுத்து மூலமாக அளித்த பதிலில் 1449 ஐஏஎஸ் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டார்.*_
_*🔹🔹இது மொத்தம் உள்ள 6553 பணியிடங்களில் 22 சதவீதமாகும். அதே போன்று 970 ஐபிஎஸ் பணியிடங்களில் காலியாக இருப்பதாக தெரிவித்தார். இது மொத்தம் உள்ள 4940 பணியிடங்களில் 19 சதவீதமாகும். காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.
COMMENTS