புதுகையில் சேமிப்பு இரத்த வங்கி
புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக சாந்தநாதபுரத்தில் டாக்டர் நரசிங்கம் & ஆத்மா குழுமத்தின் சார்பாக ஆத்மா என்ற பெயரில் சேமிப்பு இரத்தவங்கி துவக்கவிழா டாக்டர் கே.எச் தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட 2020-21 ஆம் ஆண்டின் ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரத்ததான முகாமினை துவக்கி வைத்து பேசும் போது இன்றைய காலக்கட்டத்தில் சாலை விபத்துக்கள், பிரசவ அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, தலசமியா, இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய், விஷம் அருந்தியது, விஷக்கடிபட்டவர்கள், டயாலிசஸ் மற்றும் அனுமியா போன்று ஏராளமான வியாதிகளுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது.
ஆனால் கிடைக்கப்பட்ட இரத்தத்தினை சேமித்து வைக்க முடியாமல் வெளிமாவட்டத்திற்கு அனுப்பும் சூழல் உள்ளது அதை மாற்றும் விதமாக சுமார் 1200 யூனிட் சேமிக்க ஆத்மா சேமிப்பு இரத்தவங்கியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைப் பாராட்டுகிறேன் என்றார். நிகழ்ச்சியில் இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தலைவர் டாக்டர்.சுரேஷ்குமார், சாலை விபத்து தடுப்பு மீட்பு சங்கத்தலைவர் மாருதி.க.மோகன்ராஜ், டாக்டர்.சலீம் அப்துல் குத்தூஸ், டாக்டர்.N.கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்.
முன்னதாக வருகை தந்த அனைவரையும் ளு.பாண்டியன் வரவேற்றாh.; நிறைவாக ப.அழகர் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக சாந்தநாதபுரத்தில் டாக்டர் நரசிங்கம் & ஆத்மா குழுமத்தின் சார்பாக ஆத்மா என்ற பெயரில் சேமிப்பு இரத்தவங்கி துவக்கவிழா டாக்டர் கே.எச் தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட 2020-21 ஆம் ஆண்டின் ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரத்ததான முகாமினை துவக்கி வைத்து பேசும் போது இன்றைய காலக்கட்டத்தில் சாலை விபத்துக்கள், பிரசவ அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, தலசமியா, இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய், விஷம் அருந்தியது, விஷக்கடிபட்டவர்கள், டயாலிசஸ் மற்றும் அனுமியா போன்று ஏராளமான வியாதிகளுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது.
ஆனால் கிடைக்கப்பட்ட இரத்தத்தினை சேமித்து வைக்க முடியாமல் வெளிமாவட்டத்திற்கு அனுப்பும் சூழல் உள்ளது அதை மாற்றும் விதமாக சுமார் 1200 யூனிட் சேமிக்க ஆத்மா சேமிப்பு இரத்தவங்கியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைப் பாராட்டுகிறேன் என்றார். நிகழ்ச்சியில் இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தலைவர் டாக்டர்.சுரேஷ்குமார், சாலை விபத்து தடுப்பு மீட்பு சங்கத்தலைவர் மாருதி.க.மோகன்ராஜ், டாக்டர்.சலீம் அப்துல் குத்தூஸ், டாக்டர்.N.கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்.
முன்னதாக வருகை தந்த அனைவரையும் ளு.பாண்டியன் வரவேற்றாh.; நிறைவாக ப.அழகர் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
COMMENTS