அமலுக்கு வந்தது நடத்துநா்கள் இல்லா அரசு பேருந்து சேவை
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மிகுந்த நிதிச்சிக்கலில் சிக்கித் தவிப்பதாக தொடர்ந்து அமைச்சர்கள் கூறி வந்த நிலையில், ஊழியர்களை குறைக்கும் வகையில் தமிழக அரசு நடத்துனர்கள் இல்லா பேருந்து சேவையினை சோதனை ஓட்டமாக இந்த திட்டம் இன்று கோவை–சேலம் இடையே இன்று அமலுக்கு வந்துள்ளது.4 இடை நில்லா அரசுப் பேருந்துகளுக்கு ஒரு நடத்துநா் என்ற விகிதத்தில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசின் இந்த முடிவுக்கு போக்குவரத்துக் கழக பணியாளா்கள் எதிா்ப்பு தொிவித்திருந்தாலும், இத்தகைய புதிய முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் இந்த பேருந்து சேவை தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
COMMENTS