லாரிகள் 'ஸ்டிரைக்' துவங்கியது
சென்னை : தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு சுங்கச் சாவடி கட்டண உயர்வை கண்டித்து, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்த போராட்டம் காலை 6 மணிக்கு துவங்கியது.
டீசல், சுங்க கட்டணம், மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் ஆகியவற்றின் உயர்வை கட்டுப்படுத்த கோரி இன்று காலை 6:00 மணி முதல் லாரிகள் 'ஸ்டிரைக்' துவங்கியது. தமிழகத்தில், 4.50 லட்சம் உட்பட நாடு முழுவதும் 68 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லாரிகள் ஸ்டிரைக்கால் தினமும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வியாபாரம் பாதிக்கும். காய்கறி, பால், உணவு தானியங்கள், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்படும் அபாயம் உள்ளதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
COMMENTS