ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கல் லூரி மாணவர் கைது செய்யப் பட்டார்.
சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த மையத்தில் உள்ள ஏடிஎம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க இளைஞர் ஒருவர் முயன்றுள்ளார். இதைத் தொடர்ந்து வங்கி கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலாரம் ஒலித்துள்ளது. உடனடியாக இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவல் அண்ணாசாலை போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அங்கு விரைந்து சென்று ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.
COMMENTS