ஸ்டெர்லைட்
ஆலை ஊழியர்களை அழைத்தது குறித்து நிர்வாகம் விளக்கம்
தூத்துக்குடிக்கு
ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களை மீண்டும்
அழைத்தது ஏன்⁉என்பது குறித்து
ஆலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மே.28ம் தேதி
தமிழக அரசு உத்தரவின் பேரில்
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதற்கிடையே
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நேற்று,
ஊழியர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது. இதனால்
தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல்
அதிகாரி ராம்நாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது,
"நாங்கள்
நிரந்தர ஊழியர்கள் யாரையும் பணியில் இருந்து நீக்கம்
செய்யவில்லை. அவர்கள் பணியில் இல்லாவிட்டாலும்
தொடர்ந்து மாத சம்பளம் வழங்கி
வருகிறோம். எங்களுக்குள்ள பல்வேறு நிறுவனங்களில் தூத்துக்குடியில்
பணியாற்றும் ஊழியர்களை பணியமர்த்தி வருகிறோம். ஆலையை சுத்தம் செய்யும்
பணிக்காக தான் தற்போது ஊழியர்களை
அழைத்து இருக்கிறோம். உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து
ஆலையில் உள்ள தேவையில்லாத ரசாயன
பொருட்கள், கழிவுகளை அகற்ற உதவும்படி எங்கள்
ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளோம்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
COMMENTS