புதுடில்லி: சமானியனுக்கு சேவை செய்ய நீதித்துறையில் புரட்சி தேவை, சீர்திருத்தம் தேவையில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகெய் கூறினார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தீபக்மிஸ்ரா வரும் அக்டோர் 2-ல் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பிறகு ரஞ்சன் கோகெய் அப்பொறுப்பை ஏற்கிறார். இந்நிலையில் டில்லியில் ராம்நாத் கோயங்கோ மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ரஞ்சன் கோகெய் பேசியது,நீதித்துறை ஒரு சமூக நம்பிக்கைக்குரிய மிகப்பெரிய அமைப்பு. அரசியல் அமைப்புசட்டங்களை முன்னி்ன்று பாதுகாக்கும் காவலன் தான் நீதித்துறை. ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முதல் ஆளாக வந்து நிற்பவர்கள், சுதந்திரமான பத்திரிகையாளர்களும், நீதிக்காக ஓங்கி குரல் கொடுக்கும் நீதிபதிகளும் தான் என சொல்கிறார்கள் அதை நான் ஓப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில் நீதியை காக்க ஓங்கி குரல் எழுப்பும் நீதிபதிகளும், சுதந்திரமான பத்திரிகையாளர்களும் தான் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்பது எனது கருத்து, எனவே சமானியனுக்கு சேவை செய்ய நீதித்துறையில் புரட்சி தான் தேவை. சீர்திருத்தம் தேவையில்லை. என்றார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தீபக்மிஸ்ரா வரும் அக்டோர் 2-ல் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பிறகு ரஞ்சன் கோகெய் அப்பொறுப்பை ஏற்கிறார். இந்நிலையில் டில்லியில் ராம்நாத் கோயங்கோ மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ரஞ்சன் கோகெய் பேசியது,நீதித்துறை ஒரு சமூக நம்பிக்கைக்குரிய மிகப்பெரிய அமைப்பு. அரசியல் அமைப்புசட்டங்களை முன்னி்ன்று பாதுகாக்கும் காவலன் தான் நீதித்துறை. ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முதல் ஆளாக வந்து நிற்பவர்கள், சுதந்திரமான பத்திரிகையாளர்களும், நீதிக்காக ஓங்கி குரல் கொடுக்கும் நீதிபதிகளும் தான் என சொல்கிறார்கள் அதை நான் ஓப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில் நீதியை காக்க ஓங்கி குரல் எழுப்பும் நீதிபதிகளும், சுதந்திரமான பத்திரிகையாளர்களும் தான் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்பது எனது கருத்து, எனவே சமானியனுக்கு சேவை செய்ய நீதித்துறையில் புரட்சி தான் தேவை. சீர்திருத்தம் தேவையில்லை. என்றார்.
COMMENTS