மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் பருவமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 44-ஆயிரம் அடியாக உள்ளது. ஹேரங்கி அணையின் உச்சகட்ட நீர்த்தேக்க அளவான 2857 அடியை நீர்மட்டம் தொட்டுள்ளதால் அணையில் இருந்து நீர் திறந்துவிட பட்டுள்ளது.இதே போன்று ஹேமாவதி ஆணையின் நீர்மட்டம் 2917 காண அடியிணை தொட்டுள்ளது அணை நிரம்ப இன்னும் 4 கன அடியே உள்ளதால் நீர் திறந்து விட பட்டுள்ளது.காவேரின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் உச்சகட்ட நீர்மட்டமான 124 கன அடியில் 120 கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளதால் நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கபினி அணை மொத்த நீர்த்தேக்க அளவை எட்ட உள்ள நிலையில் பாதுகாப்பிற்காக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77 அடியை தாண்டியுள்ள நிலையில் இன்னும் 2 நாட்களில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
COMMENTS