தந்தையை
முறையாக கவனிக்காவிட்டால், சொத்தினை திரும்ப பெறலாம்-மும்பை
உயர்நீதிமன்றம்
மகன் முறையாக கவனிக்கத் தவறினால்
சொத்தை திரும்பப் பெறலாம் என்று மும்பை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு முதியவரின் மனைவி
கடந்த 2014-ம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் மறுமணம் செய்ய
விரும்பி மணம் செய்துள்ளார். அப்போது
மகன் மற்றும் மறுமகளின் நிர்ப்பந்தத்தின்
பேரில் தனது குடியிருப்பில் 50 சதவீதத்தை
சொந்த மகனுக்கு எழுதிக்கொடுத்துள்ளார். எனினும் அவர் தனது
தந்தை மற்றும் அவரது இரண்டாவது
மனைவினை கொடுமைப்படுத்தி வந்ததையடுத்து அவரது தந்தை நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி,
முதியவர்கள் பாதுகாப்புச் சட்டத்தை சுட்டிக்காட்டி மகன் முறையாகக் கவனிக்கத்
தவறினால் கொடுத்த சொத்தை திரும்பப்பெற
உரிமையுண்டு என தீர்ப்பளித்தார். மேலும்
மகனுக்கு முதியவர் எழுதிக்கொடுத்த பத்திரத்தை ரத்து செய்தும் நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.
COMMENTS