டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
💸வாடகையை ⏫உயர்த்தி வழங்கக்கோரி 🚛எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்💪 தொடங்கியது. இதனால் சமையல் எரிவாயு தட்டுபாடு😟 ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது⚠. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ✍ஒப்பந்தத்தில், வாடகை ஒப்பந்தப்புள்ளி மண்டல அளவில் இல்லாமல் மாநில அளவில் தனித்தனியாக நடத்தப்படும்😯 என்றும் அதில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த 🚛லாரி உரிமையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்😓 என்று குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நடத்தப்பட்டால், டேங்கர் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்பை இழக்க நேரிடும்☹ என்பதால், இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி😡 டேங்கர் லார் உரிமையாளர்கள் இன்று காலை ⌚6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த 💪போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தில் 🚛4,500 டேங்கர் லாரிகள் பங்கேற்றுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் சமையல் எரிவாயு தட்டுபாடு🚫 ஏற்படும் அபாயம்😱 ஏற்பட்டுள்ளது.
COMMENTS