பொன்னமராவதி ஜூலை-16
பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி சங்கரன்குண்டு ஊரணி பொன்னமராவதி ஒன்றிய மக்கள் பாதை தன்னார்வலர்களால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள மக்கள் பாதை தன்னார்வலர்களின் தீவிர முயற்சியால் பொன்னமராவதி
அருகே வலையப்பட்டி பகுதியில் உள்ள சங்கரன்குண்டு ஊரணியை சுத்தம் செய்து பணி முடித்துள்ளது.
சென்ற ஜூன் மாதம் பொன்னமராவதி வலையப்பட்டி பகுதியில் உள்ள சங்கரன்குண்டு ஊரணி கடும் முட்புதர்களுடன் கருவேலமரம், குப்பை பாட்டில்கள் என ஏராளமான கழிவுகள் நிறைந்து பாம்புகள் நடமாட்டத்தோடு அப்பகுதி மக்களுக்கு மாசுபடும் அளவிற்கு கிடந்தது. இதனை கண்காணித்த மக்கள் பாதை உடனே அந்த ஊரணியின் உரிமையாளரான வடுகநாதன் செட்டியாரின் குடும்ப வகையராக்கள் ராமநாதன் செட்டியார் வகையில் உள்ள செட்டியார்களை சந்தித்து மக்கள் நலன் காக்க ஊரணியை தூய்மை பணிக்காக தத்தெடுத்தது. அதற்கான அனுமதி கடிதமும் பெற்று வேலையை ஆரம்பித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூலை 9 தேதி அன்று பொன்னமராவதி ஒன்றிய மக்கள் பாதை தன்னார்வலர்களை கொண்டு முதல் கட்டமாக தூய்மை செய்யும் பணியினை ஆரம்பித்தது. பின்பு இரண்டாம் கட்டமாக ஜூலை 16 ஆம் தேதி அன்று இரண்டு ஜே.சி.பியின் உதவியில் ஊரணியை சுத்தம் செய்தது. கடும் முட்புதர்களாக இருந்த ஊரணியை சுத்தம் செய்து கொடுத்த மக்கள் பாதை நிர்வாகிகளுக்கு அப்பகுதி வாழ் பொதுமக்கள், நகரத்தார்கள் என ஏராளமானோர் பாராட்டினர். இதில் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் சூசை மைகேல், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அறிவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சமூகப்பணி செய்தனர்.
இது மட்டுமல்லாது மக்களின் நலன் காக்க இன்னும் மாசுபாடுகள் உள்ள அனைத்து ஊரணியையும் சுத்தம் செய்யவுள்ளோம் என்று மக்கள் பாதை நிர்வாகிகள் கூறுகின்றனர்.
📗📨📺📹📸📞☎
படங்கள் மற்றும் செய்திகள்
KEERAVANI PHOTOGRAPHY
பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி சங்கரன்குண்டு ஊரணி பொன்னமராவதி ஒன்றிய மக்கள் பாதை தன்னார்வலர்களால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள மக்கள் பாதை தன்னார்வலர்களின் தீவிர முயற்சியால் பொன்னமராவதி
அருகே வலையப்பட்டி பகுதியில் உள்ள சங்கரன்குண்டு ஊரணியை சுத்தம் செய்து பணி முடித்துள்ளது.
சென்ற ஜூன் மாதம் பொன்னமராவதி வலையப்பட்டி பகுதியில் உள்ள சங்கரன்குண்டு ஊரணி கடும் முட்புதர்களுடன் கருவேலமரம், குப்பை பாட்டில்கள் என ஏராளமான கழிவுகள் நிறைந்து பாம்புகள் நடமாட்டத்தோடு அப்பகுதி மக்களுக்கு மாசுபடும் அளவிற்கு கிடந்தது. இதனை கண்காணித்த மக்கள் பாதை உடனே அந்த ஊரணியின் உரிமையாளரான வடுகநாதன் செட்டியாரின் குடும்ப வகையராக்கள் ராமநாதன் செட்டியார் வகையில் உள்ள செட்டியார்களை சந்தித்து மக்கள் நலன் காக்க ஊரணியை தூய்மை பணிக்காக தத்தெடுத்தது. அதற்கான அனுமதி கடிதமும் பெற்று வேலையை ஆரம்பித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூலை 9 தேதி அன்று பொன்னமராவதி ஒன்றிய மக்கள் பாதை தன்னார்வலர்களை கொண்டு முதல் கட்டமாக தூய்மை செய்யும் பணியினை ஆரம்பித்தது. பின்பு இரண்டாம் கட்டமாக ஜூலை 16 ஆம் தேதி அன்று இரண்டு ஜே.சி.பியின் உதவியில் ஊரணியை சுத்தம் செய்தது. கடும் முட்புதர்களாக இருந்த ஊரணியை சுத்தம் செய்து கொடுத்த மக்கள் பாதை நிர்வாகிகளுக்கு அப்பகுதி வாழ் பொதுமக்கள், நகரத்தார்கள் என ஏராளமானோர் பாராட்டினர். இதில் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் சூசை மைகேல், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அறிவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சமூகப்பணி செய்தனர்.
இது மட்டுமல்லாது மக்களின் நலன் காக்க இன்னும் மாசுபாடுகள் உள்ள அனைத்து ஊரணியையும் சுத்தம் செய்யவுள்ளோம் என்று மக்கள் பாதை நிர்வாகிகள் கூறுகின்றனர்.
📗📨📺📹📸📞☎
படங்கள் மற்றும் செய்திகள்
KEERAVANI PHOTOGRAPHY
COMMENTS