காற்று மாசால் உயிரிழப்பு: டில்லிக்கு மூன்றாம் இடம்
காற்றில் ஏற்பட்டுள்ள மாசால் உயிரிழப்போர் பட்டியலில், உலகளவில், டில்லி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. உலக அளவில் உள்ள பெரிய நகரங்களில், காற்றில் ஏற்படும் மாசு மற்றும் அதனால் உண்டாகும் உயிரிழப்புகள் குறித்து, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலக அளவில், சீனாவின் ஷாங்காய் நகரம், காற்று மாசில், முதலிடம் வகிக்கிறது. இங்கு, 2016ல், 18 ஆயிரத்து, 200 பேர், மோசமான காற்றை சுவாசித்ததால், உயிரிழந்தனர். மேலும், சீனாவில் உள்ள பீஜிங் நகரத்தில், 17 ஆயிரத்து, 600 பேர், காற்று மாசால், 2016ல், உயிரிழந்தனர். இந்தப்பட்டியலில், டில்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. டில்லியில், 2016ல், 15 ஆயிரம் பேர், மோசமான காற்றை சுவாசித்ததால் உயிரிழந்தனர்; மும்பையில், 10 ஆயிரத்து, 500 பேரும், சென்னை மற்றும் பெங்களூரில், தலா, 4,800 பேரும், காற்று மாசால், பலியாகி உள்ளனர்.மோசமான காற்றை சுவாசிப்பவர்கள், இதய நோய், நுரையீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காற்றில் ஏற்பட்டுள்ள மாசால் உயிரிழப்போர் பட்டியலில், உலகளவில், டில்லி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. உலக அளவில் உள்ள பெரிய நகரங்களில், காற்றில் ஏற்படும் மாசு மற்றும் அதனால் உண்டாகும் உயிரிழப்புகள் குறித்து, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலக அளவில், சீனாவின் ஷாங்காய் நகரம், காற்று மாசில், முதலிடம் வகிக்கிறது. இங்கு, 2016ல், 18 ஆயிரத்து, 200 பேர், மோசமான காற்றை சுவாசித்ததால், உயிரிழந்தனர். மேலும், சீனாவில் உள்ள பீஜிங் நகரத்தில், 17 ஆயிரத்து, 600 பேர், காற்று மாசால், 2016ல், உயிரிழந்தனர். இந்தப்பட்டியலில், டில்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. டில்லியில், 2016ல், 15 ஆயிரம் பேர், மோசமான காற்றை சுவாசித்ததால் உயிரிழந்தனர்; மும்பையில், 10 ஆயிரத்து, 500 பேரும், சென்னை மற்றும் பெங்களூரில், தலா, 4,800 பேரும், காற்று மாசால், பலியாகி உள்ளனர்.மோசமான காற்றை சுவாசிப்பவர்கள், இதய நோய், நுரையீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
COMMENTS