பொன்னமராவதி சிவன் கோவிலில் தேய்பிறை அஸ்டமி ஹோமம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆவுடைய நாயகி சமேத சோழீஸ்வரர் அலையத்தில் கால பைரவருக்கு தேய்பிறை அஸ்டமி சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது. இதில் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜா அம்பலகாரர் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர். சேதுபதி அம்பலகாரர், நந்தினி பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தார். மேலும் பரமசிவம், பொரியாளர் வைரவன், தியாகராஜன், ரமேஷ், கணேஷ்இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு ஆன்மீகப்பணிகள் செய்தனர். இதில் பொன்னமராவதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு அன்னதான அருட்பிரசாதம் மற்றும் பைரவரின் அருளும் பெற்றனர்.
படங்கள் மற்றும் செய்திகள்
KEERAVANI PHOTOGRAPHY
COMMENTS