பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் கட்டித்தராவிட்டால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பபோவதில்லை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக இருந்து 31-7-207ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பள்ளி ஊராட்;சி ஒன்றியக்கட்டிடத்தில் இயங்கிவந்தது. இதன் அருகில் 4ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த பள்ளியில்
கருப்புக்குடிப்பட்டி,ஆலம்பட்டி,காடம்பட்டி, கீரணிப்பட்டி, கருதக்கோடம்பட்டி, களத்துவீடு உள்ளிட்ட் பல்வேறு கிராமங்களில் இருந்து 194மாணவ,மாணவிகள் படிக்கின்றார். தலைமையாசிரியர் உள்ளிட்ட 9ஆசிரியர்கள், ஒரு தொகுப்பூதிய ஆசிரியர், ஒரு அலுவலக பணியாளர் பணிபுரிகின்றனர். 6ம்வகுப்பு முதல் 9ம்வகுப்பு வரை ஒவ்வொறு வகுப்பிலும் இரண்டு செக்சன் உள்ளது. 10ம்வகுப்பு மட்டுமே ஒரு செக்சன். 9மற்றும் 10ம்வகுப்புகள் மட்டுமே வகுப்புகள் கட்டிடத்தில் இயங்குகின்றன. மற்ற அனைத்து வகுப்புகளும் மரத்தடியில் இயங்குகிறது மற்ற பழைய கட்டிடங்கள் இடிந்தும், கதவுகள் உடைந்து கிடப்பதால் அதில் மாணவர்கள் உட்கார முடியாத நிலையுள்ளது. இதனால் மரத்தடியில் தான் வகுப்பறை நடக்கின்றது. சிறிது மழைபெய்தால் கூட வகுப்பு நடத்தமுடியாத நிலையுள்ளது. காற்று வீசினால் மரக்கிளைகள் விழுமோ என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் பயந்துகொண்டு பாடம் நடத்துகின்றனர். மாணவர்கள் மண் தரையில் உட்கார்ந்து உட்கார்ந்து மாணவர்கள் கால்கள் தேய்ந்தும் சட்டைகள் கிழிந்தும் காணப்படும் இந்த பள்ளிக்கு கட்டிடம் கட்டவேண்டும் என பலமுறை இப்பகுதி மக்கள் முறையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள இந்த கருப்புக்குடிப்பட்டி பள்ளிக்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்டு 15ம் தேதி முதல் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பபோவதில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாணவர்களின் நலனில் அக்கரை கொண்டு கருப்புக்குடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படங்கள் மற்றும் செய்திகள்
KEERAVANI PHOTOGRAPHY
கருப்புக்குடிப்பட்டி,ஆலம்பட்டி,காடம்பட்டி, கீரணிப்பட்டி, கருதக்கோடம்பட்டி, களத்துவீடு உள்ளிட்ட் பல்வேறு கிராமங்களில் இருந்து 194மாணவ,மாணவிகள் படிக்கின்றார். தலைமையாசிரியர் உள்ளிட்ட 9ஆசிரியர்கள், ஒரு தொகுப்பூதிய ஆசிரியர், ஒரு அலுவலக பணியாளர் பணிபுரிகின்றனர். 6ம்வகுப்பு முதல் 9ம்வகுப்பு வரை ஒவ்வொறு வகுப்பிலும் இரண்டு செக்சன் உள்ளது. 10ம்வகுப்பு மட்டுமே ஒரு செக்சன். 9மற்றும் 10ம்வகுப்புகள் மட்டுமே வகுப்புகள் கட்டிடத்தில் இயங்குகின்றன. மற்ற அனைத்து வகுப்புகளும் மரத்தடியில் இயங்குகிறது மற்ற பழைய கட்டிடங்கள் இடிந்தும், கதவுகள் உடைந்து கிடப்பதால் அதில் மாணவர்கள் உட்கார முடியாத நிலையுள்ளது. இதனால் மரத்தடியில் தான் வகுப்பறை நடக்கின்றது. சிறிது மழைபெய்தால் கூட வகுப்பு நடத்தமுடியாத நிலையுள்ளது. காற்று வீசினால் மரக்கிளைகள் விழுமோ என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் பயந்துகொண்டு பாடம் நடத்துகின்றனர். மாணவர்கள் மண் தரையில் உட்கார்ந்து உட்கார்ந்து மாணவர்கள் கால்கள் தேய்ந்தும் சட்டைகள் கிழிந்தும் காணப்படும் இந்த பள்ளிக்கு கட்டிடம் கட்டவேண்டும் என பலமுறை இப்பகுதி மக்கள் முறையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள இந்த கருப்புக்குடிப்பட்டி பள்ளிக்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்டு 15ம் தேதி முதல் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பபோவதில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாணவர்களின் நலனில் அக்கரை கொண்டு கருப்புக்குடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படங்கள் மற்றும் செய்திகள்
KEERAVANI PHOTOGRAPHY
COMMENTS