பாட்னா: பா.ஜ.வுடன் தொகுதி பங்கீடு ஒரு மாதத்திற்குள் முடிவு செய்யப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 2019 பார்லி. லோக்சபா தேர்தலில் பா.ஜ.வுடன் கூட்டணி என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷாவும் உறுதிசெய்தார். இதற்கிடையே 40 தொகுதிகளை கொண்ட பீகாரில் 17 - 17 தொகுதிகளில் பா.ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும், பிற தொகுதிகள் இதர கட்சிகளுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது. இருப்பினும் தொகுதி பங்கீடில் இழுபறி நீடிக்கிறது.
நேற்று செய்தியாளர்களுக்கு நிதிஷ்குமார் அளித்த பேட்டி, மாநிலத்தில் தொகுதி பங்கீடு விவகாரம் விரைவில் முடியும். பா.ஜ.விலிருந்து தொகுதி பங்கீடு தொடர்பான பரிந்துரை ஒரு மாதத்தில் கிடைக்கும், அதனையடுத்து உடனடியாக முடிவு எடுக்கப்படும். இவ்வாறு நிதிஷ் கூறினார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 2019 பார்லி. லோக்சபா தேர்தலில் பா.ஜ.வுடன் கூட்டணி என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷாவும் உறுதிசெய்தார். இதற்கிடையே 40 தொகுதிகளை கொண்ட பீகாரில் 17 - 17 தொகுதிகளில் பா.ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும், பிற தொகுதிகள் இதர கட்சிகளுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது. இருப்பினும் தொகுதி பங்கீடில் இழுபறி நீடிக்கிறது.
நேற்று செய்தியாளர்களுக்கு நிதிஷ்குமார் அளித்த பேட்டி, மாநிலத்தில் தொகுதி பங்கீடு விவகாரம் விரைவில் முடியும். பா.ஜ.விலிருந்து தொகுதி பங்கீடு தொடர்பான பரிந்துரை ஒரு மாதத்தில் கிடைக்கும், அதனையடுத்து உடனடியாக முடிவு எடுக்கப்படும். இவ்வாறு நிதிஷ் கூறினார்.
COMMENTS