கடலூர் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாதால் கடைகளுக்கு சீல் -நிலுவை தொகை ரூ.65 லட்சத்தில் ரூ.30 லட்சம் வசூல்
கடலூர் நகராட்சியில் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் உள்ளதால் நகராட்சியில் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளதை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டது.அதில் சொத்து வரி,குடிநீர் வரி,கடை வாடகை செலுத்தாவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டது.அதில் ஒரு சில மட்டும் தொகையை நகராட்சியில் கட்டியுள்ளனர்.கடலூர் நகராட்சிக்கு சொந்தமான 703 கடைகள் உள்ளன.இதில் பல மாதங்களாக நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை உள்ளவர்கள் வாடகை சரிவர செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.அதன் அடிப்படையில் இன்று காலை கடலூர் நகராட்சி ஆனையர் சரவணன் கடலூர் முது நகர்,கடலூர் மத்திய பேருந்து நிலையம்,போடி செட்டித்தெரு,வண்ணாரப்பாளையம்,மஞ்சக்குப்பம் ஆகிய பகுதியில் உள்ள நகராட்சிக்கஏற்ப்படுத்தி கடைகளில் குத்தகைக்கு உள்ளவர்கள் வாடகை செலுத்தாதால் 31 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும் இதுவரை ரூ.30 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மீதம் ரூ.35 லட்சம் நிலுவையில் உள்ளதாக நகராட்சி ஆணையர் கூறினார்.இந்த திடீர் நடவடிக்கை வாடகை செலுத்தாதவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
COMMENTS