போபால்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் ம.பி.,நகரங்கள் அமெரிக்க நகரங்களை விட சிறப்பாக இருக்கும் என மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறி உள்ளார்.
ம.பி.,மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நகர்புற பகுதிகளில் வளர்ச்சி கொண்டாட்டம் என்ற விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சிவராஜ்சிங்சவுகான் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள நகரங்கள் மிகவும் தூய்மையாகவும் , அழகான மேம்பட்ட நகரங்களாக அமெரிக்காவை விட சிறப்பானதாக இருக்கும் என கூறினார்.
முதல்வரின் இப்பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் மாநில முதல்வரின் இப்பேச்சு சிறந்த நகைச்சசுவைகளில் ஒன்று என காங்கிரஸ் கூறி உள்ளது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல் நாத் கூறுகையில் பருவமழை மற்றும் மழை காலத்திற்கு பின்னர் இது குறித்து மக்களிடம் சிவராஜ்சவுகான் கேட்க வேண்டும் என கூறினார்.
ம.பி.,மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நகர்புற பகுதிகளில் வளர்ச்சி கொண்டாட்டம் என்ற விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சிவராஜ்சிங்சவுகான் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள நகரங்கள் மிகவும் தூய்மையாகவும் , அழகான மேம்பட்ட நகரங்களாக அமெரிக்காவை விட சிறப்பானதாக இருக்கும் என கூறினார்.
முதல்வரின் இப்பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் மாநில முதல்வரின் இப்பேச்சு சிறந்த நகைச்சசுவைகளில் ஒன்று என காங்கிரஸ் கூறி உள்ளது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல் நாத் கூறுகையில் பருவமழை மற்றும் மழை காலத்திற்கு பின்னர் இது குறித்து மக்களிடம் சிவராஜ்சவுகான் கேட்க வேண்டும் என கூறினார்.
COMMENTS