டி.என்.பி.எல் கிரிக்கெட் கேளிக்கை வரி விதிமீறல்; செயல்அலுவலர் நோட்டீஸ்...
திருநெல்வேலி: நெல்லையில் நாளை தொடங்கவுள்ள டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு, உள்ளாட்சி அமைப்புகளில் முறைப்படி முன்வைப்புத் தொகை செலுத்தி அனுமதி பெறாமல் நடத்தப்படுவது குறித்து பதிலளிக்குமாறு விளக்கம் கேட்டு டவுன் பஞ்சாயத்து கேளிக்கை அலுவலர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நெல்லை, சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் நாளை ஜூலை 11ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை, காஞ்சி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி உள்ளிட்ட 4 ஆட்டங்களும் நடக்க இருக்கின்றன. உரிய அனுமதி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளியின் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டிகள் சட்டத்துக்கு விரோதமாக நடக்க இருக்கிறது. அதனால் இது குறித்து உரிய விசாரணை நடத்தி, அனுமதி பெறாமல் நடத்தப்படும் இந்தப் போட்டிகளுக்கு சங்கர்நகர் சிறப்பு பேரூராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்'' என வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து சங்கர்நகர் டவுன் பஞ்சாயத்து செயல்அலுவலர் கணேசனிடம் கேட்டபோது, இதற்கு எந்த அனுமதி கடிதமும் எங்களிடம் தரவில்லை. கேளிக்கை வரியும் எங்களிடம் நேரடியாக செலுத்தவில்லை. இதுகுறித்து டிஎன்பிஎல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம் என்றார்.
COMMENTS