சிறுகதை
சில சமயம்
வீடு நரகம்
Old age home சொர்க்கம்
"ராதிகா, இப்பத்தான் நம்ம பசங்க பெரியவங்களாகி வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க, நானும் ரிடைர்ட் ஆயாச்சு.இப்பவவாவது, எங்கப்பாவை வீட்டில் கொண்டு வச்சுக்கலாம். பாவம் அவர், எத்தனை வருஷமா ஓல்ட் ஏஜ் ஹோமில் இருப்பார்.
ராதிகா, சரியென்றாள். ரமேஷுக்கு ரொம்ப சந்தோஷம். உடனே ஹோமுக்கு ஃபோன் செய்தான்
சங்கரன் சார். உங்க பையன் ரமேஷ் ஃபோன் பண்ணார். உங்களை வீட்டுக்கு கூட்டிடு போறாராம். ரெடியா இருங்க.
ரமேஷ் தன் தந்தையை காரில் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். வரும் வழியெல்லாம் சங்கரன் தன் பேரன் ரவியை பற்றியும், பேத்தி சுஜாதா பற்றியும் நினைத்துக்கொண்டே வந்தார்.
" என்னடா ரமேஷ், வீட்டில் யாரும் இல்லை."
" அப்பா அவுங்களெல்லாம் வேலைக்கு போயிருக்காங்க. சாயந்திரம் வந்துருவாங்க. "
சாயந்திரம் ஆயிற்று, இரவு 9 மணியும் கடந்தது.
என்னடா இன்னும் யாரையும் காணோம்?.
அவுங்களுக்கு வேலை ஜாஸ்தியா இருந்துருக்கும். நீங்க வாங்க சாப்பிடுங்க.
சங்கரன் சாப்பிட்டு உறங்கி போனார்.
காலை 7 மணி
டேய் ரமேஷ், எங்கடா என் பேரக்குழந்தைகள்.
அப்பா அவுங்க காலையிலெயே வேலைக்கு போயிட்டாங்க.
உன் மனைவி ராதிகா என்கேடா?
அவள் நேற்று ராத்திரியே கம்பெனி விஷயமா சிங்கப்பூர் போயிட்டா. வர ஒரு வாரம் ஆகும்.
2 நாட்கள் கழிந்தன.
என்னடா வந்து 2 நாளாச்சு, பேரக்குழந்தைகளை பார்க்கவே முடியல.
அப்பா அவுங்க வேலை அப்படி. சில சமயம் நானே பார்க்க முடியாது.
ரமேஷ். நான் சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காதே. என்னை இங்கு கூட்டியே வந்திருக்க வேண்டாம். ஹோமில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அவர்களுடன் அரட்டை அடித்தால் பொழுது போவதே தெரியாது. நானும் உங்களைப்பற்றி நல்ல நினைவோடு இருப்பேன். என்னை திருப்பி அங்கேயே விட்டுடு.
சரிப்பா. பிள்ளைகளின் கல்யணம் முடியட்டும், நானும் அங்கேயே வந்துடறேன், என்று கூறி, கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டான்.
இதுதான் யதார்த்தம், இந்த காலத்தில். யாரும் அய்யோ என் பிள்ளை என்னை ஹோமில் விட்டுவிட்டானே என்று கலங்க வேண்டாம். சில சமயங்களில் வீடு நரகம், ஓல்டேஜ் ஹோமே சொர்க்கம்.
because you meet like minded people there and your thoughts are of same wave length.
நட்புடன்! !!!!!!
சில சமயம்
வீடு நரகம்
Old age home சொர்க்கம்
"ராதிகா, இப்பத்தான் நம்ம பசங்க பெரியவங்களாகி வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க, நானும் ரிடைர்ட் ஆயாச்சு.இப்பவவாவது, எங்கப்பாவை வீட்டில் கொண்டு வச்சுக்கலாம். பாவம் அவர், எத்தனை வருஷமா ஓல்ட் ஏஜ் ஹோமில் இருப்பார்.
ராதிகா, சரியென்றாள். ரமேஷுக்கு ரொம்ப சந்தோஷம். உடனே ஹோமுக்கு ஃபோன் செய்தான்
சங்கரன் சார். உங்க பையன் ரமேஷ் ஃபோன் பண்ணார். உங்களை வீட்டுக்கு கூட்டிடு போறாராம். ரெடியா இருங்க.
ரமேஷ் தன் தந்தையை காரில் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். வரும் வழியெல்லாம் சங்கரன் தன் பேரன் ரவியை பற்றியும், பேத்தி சுஜாதா பற்றியும் நினைத்துக்கொண்டே வந்தார்.
" என்னடா ரமேஷ், வீட்டில் யாரும் இல்லை."
" அப்பா அவுங்களெல்லாம் வேலைக்கு போயிருக்காங்க. சாயந்திரம் வந்துருவாங்க. "
சாயந்திரம் ஆயிற்று, இரவு 9 மணியும் கடந்தது.
என்னடா இன்னும் யாரையும் காணோம்?.
அவுங்களுக்கு வேலை ஜாஸ்தியா இருந்துருக்கும். நீங்க வாங்க சாப்பிடுங்க.
சங்கரன் சாப்பிட்டு உறங்கி போனார்.
காலை 7 மணி
டேய் ரமேஷ், எங்கடா என் பேரக்குழந்தைகள்.
அப்பா அவுங்க காலையிலெயே வேலைக்கு போயிட்டாங்க.
உன் மனைவி ராதிகா என்கேடா?
அவள் நேற்று ராத்திரியே கம்பெனி விஷயமா சிங்கப்பூர் போயிட்டா. வர ஒரு வாரம் ஆகும்.
2 நாட்கள் கழிந்தன.
என்னடா வந்து 2 நாளாச்சு, பேரக்குழந்தைகளை பார்க்கவே முடியல.
அப்பா அவுங்க வேலை அப்படி. சில சமயம் நானே பார்க்க முடியாது.
ரமேஷ். நான் சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காதே. என்னை இங்கு கூட்டியே வந்திருக்க வேண்டாம். ஹோமில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அவர்களுடன் அரட்டை அடித்தால் பொழுது போவதே தெரியாது. நானும் உங்களைப்பற்றி நல்ல நினைவோடு இருப்பேன். என்னை திருப்பி அங்கேயே விட்டுடு.
சரிப்பா. பிள்ளைகளின் கல்யணம் முடியட்டும், நானும் அங்கேயே வந்துடறேன், என்று கூறி, கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டான்.
இதுதான் யதார்த்தம், இந்த காலத்தில். யாரும் அய்யோ என் பிள்ளை என்னை ஹோமில் விட்டுவிட்டானே என்று கலங்க வேண்டாம். சில சமயங்களில் வீடு நரகம், ஓல்டேஜ் ஹோமே சொர்க்கம்.
because you meet like minded people there and your thoughts are of same wave length.
நட்புடன்! !!!!!!
COMMENTS