தாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச்சூழல், தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
புதுடெல்லி: வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது. உலகின் அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம் மங்கி, பொலிவிழந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணையின் போது, தாஜ் மஹால் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை பராமரிக்கும் பொறுப்புகளை தொல்லியல் துறை இயக்குனர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர், ஆக்ரா வட்டார கமிஷனர் ஆகியோர் ஏற்பார்கள் என உச்சநீதிமன்றத்திடம் தொல்லியல் துறை உறுதியளித்துள்ளது. இதனையடுத்து தாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச்சூழல் துறை, தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி: வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது. உலகின் அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம் மங்கி, பொலிவிழந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணையின் போது, தாஜ் மஹால் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை பராமரிக்கும் பொறுப்புகளை தொல்லியல் துறை இயக்குனர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர், ஆக்ரா வட்டார கமிஷனர் ஆகியோர் ஏற்பார்கள் என உச்சநீதிமன்றத்திடம் தொல்லியல் துறை உறுதியளித்துள்ளது. இதனையடுத்து தாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச்சூழல் துறை, தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
COMMENTS