கோலார் தங்கச்சுரங்கத்தில் 4000 அடி ஆழம் சென்று பார்வையிட்ட கலைஞர்......
தங்கவயல்: ஆசிய நாடுகளிலேயே மிகவும் ஆழ தங்கச் சுரங்கம் கோலார் தங்க வயல். இந்த சுரங்கத்திற்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி வந்து 4 ஆயிரம் அடி ஆழத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.கடந்த 1957ம் ஆண்டு திமுக.வில் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி, தங்க வயல் வந்தார். இரண்டு நாட்கள் தங்கியிருந்த அவர், தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகள் குறித்து தொழிற்சங்க தலைவர்களிடம் கேட்டார்.
தொழிலாளர்கள் அணிந்து கொள்ளும் கம்பூட், தொப்பி, கை க்ளவுஸ் ஆகியவை அணிந்து, சுரங்கத்திற்குள் வெளிச்சம் பெற பயன்படுத்தும் கார்பேட் விளக்கு ஆகியவை எடுத்துக் கொண்டும் 4 ஆயிரம் அடி வரை சென்று பாறையில் தங்க படிவங்கள் இருப்பதையும், அதை தொழிலாளர்கள் எப்படி வெட்டி எடுத்து மேலே கொண்டு வருகிறார்கள். கல்லில் இருந்து தங்கம் எப்படி பிரித்தெடுக்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
COMMENTS