ஸ்டாலினுக்கு சோனியா உருக்கமான கடிதம் : தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய இழப்பு.
புதுடெல்லி. ‘‘கலைஞர் கருணாநிதியின் மறைவு, எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. அவர் எனக்கு தந்தையை போல் இருந்தார்’ என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ஐ.மு.கூட்டணி தலைவர் சோனியா காந்தி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, ஐ.மு.கூட்டணி தலைவர் சோனியா காந்தி அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசியல் உலகத்திலும், பொது சேவையிலும் உன்னதமான தலைவராக கருணாநிதி இருந்தார். அவரது மறைவு, எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு. அவர் எப்போதும், என்னிடம் மிகுந்த அன்பையும், பரிவையும் காட்டியவர். அதை என்னால் மறக்க முடியாது. அவர் எனக்கு தந்தையை போன்றும் இருந்தார். கருணாநிதி போன்ற நபரை நாம் மீண்டும் பார்க்க முடியாது. அந்த அரசியல் மேதை, அவரது அர்ப்பணிப்பு ஆகியவை இல்லாதது இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் பெரிய இழப்பு. கருணாநிதி மிகச் சிறந்த இலக்கியவாதி. தமிழகத்தை வளமாக்கியதிலும், பண்பாட்டு மற்றும் கலையை வளர்த்து உலகளவிலான அங்கீகாரம் கிடைக்கச் செய்ததிலும் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். கருணாநிதி தனது நீண்ட சிறப்பான வாழ்க்கையில், சமூக நீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், பிற்படுத்தப்பட்ட ஒவ்வொருவரின் நலனுக்காகவும் பாடுபட்டார். கருணாநிதி முழுமையான, மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்ந்தார். தற்போது கஷ்டங்களில் இரு ந்து விடுபட்டுள்ளார். அவர் உடல்நிலை குன்றிய சமயத்தில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் கவனித்துக் கொண்டது பாராட்டத்தக்கது. இவ்வாறு சோனியா கூறியுள்ளார்*
*‘கருணாநிதி பாரம்பரியத்தை* *முன்னெடுத்து செல்வீர்கள்’*
*தனது கடிதத்தில் சோனியா* *மேலும் கூறுகையில், ‘தமிழக அரசிலும், அரசியலிலும்* *கருணாநிதியின் நீண்டகால பணி, மிகச் சிறந்த மற்றும் சகிப்புதன்மையுடன் கூடிய பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளது. அதற்காக அவர் எப்போதும் போற்றப்படுவார், நினைவு கூறப்படுவார். நீங்கள் (மு.க.ஸ்டாலின்) தனது பாரம்பரியத்தை மேலும் பேணிக்காத்து, முன்ெனடுத்து செல்வீர்கள் என கருணாநிதி நம்பினார். அதையே நானும் நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்
COMMENTS