இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் துவக்கம்
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ஐகோர்ட் அனுமதி அளித்தது. இதையடுத்து, அங்கு அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. துரைமுருகன், வேலு மேற்பார்வையில் பணிகள் நடக்கின்றன. அண்ணாதுரை, ஜெயலலிதா நினைவிடங்களுக்கு இடையே கருணாநிதியின் நினைவிடம் அமைய இருக்கிறது. எம்ஜிஆர்., அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு இணையாக கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் ராஜாஜி அரங்கிலிருந்து கருணாநிதி உடலை கொண்டு செல்ல பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனங்கள் வந்துள்ளது. ராணுவ படைகளும், போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர் வந்து அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அவர்களும், ஆந்திர முதல்வரும் அஞ்சலி செலுத்தி சென்றனர் குறிப்பிடத்தக்கது.
COMMENTS