நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ஆலங்குடி செனட்ரல் ரோட்டரி சங்கத்தின் 11ஆம் ஆண்டின் துவக்க விழா சங்கத் தலைவர்
பி.கணபதி தலைமையில் ஆலங்குடி விசிஆர் மஹாலில் நடைபெற்றது சென்ற வருட செயலாளர்
அறிக்கையையும் புதிய உறுப்பினர்கள் 8
பேரை சங்கத்தில் இணைத்து வாழ்த்துரையை துணை ஆளுனர் வழக்கறிஞர் எஸ்பி.ராஜா, மண்டல மண்டல ஒருங்கிணைப்பாளர்
எஸ்.சீனிவாசன் வழங்கினார்கள். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் பொருளாளர்
எஸ்.சூசைராஜ் வரவேற்றார். 2020-21 ஆண்டு ரோட்டரி மாவட்ட ஆளுனர்
அ.லெ.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களுக்கு
பதவிப்பிரமாணம் செய்து வைத்து பசுவயல் கிராமத்தை மகிழ்ச்சி கிராமமாக தத்து எடுத்து
பள்ளிக்கு தண்ணீர் ட்ரம் வழங்கினார். 10
ஏழைப்பெண்களுக்கு இலவச சேலை வழங்கினார்.
மேலும் 2015-16 ஆம் ஆண்டின் ரோட்டரி 3000ன்
மாவட்ட ஆளுனர் எம்.முருகானந்தம் அவர்களின் கனவு திட்டமான
அரசுப்பள்ளிகளுக்கு ஐளெரடயவழச கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஆலங்குடி அரசு
மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கி பேசும்போது ஆலங்குடி சென்டரல் ரோட்டரி சங்கம்
இந்தப் பகுதியில் நிறைய நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கி வருவது
பாராட்டுதலுக்குரியது என்றார். இளைஞர் சேவை இயக்குனர் ளுர்.அப்ரோஸ் இளைஞர் சேவை
பற்றிய வாழ்த்துரை வழங்கினார். மக்கள்
தொடர்பு இணைச்செயலாளர் க.மோகன்ராஜ் கலந்து கொண்டு பேசும்போது சென்ற ஆண்டின் தலைவர்
இந்த ஆண்டில் உள்ளதால் சென்ற வருடம் விட்டுப் போன சேவைகளை இந்த ஆண்டு செய்வார்
என்றார் விழாவினை விஎன்எஸ்.செந்தில் ஆர்.முத்துச்சாமி விழாவினை தொகுத்து
வழங்கினார்கள் நிகழ்ச்சியில் நிறைவில் செயலாளர் அற்புத அலெக்சாண்டர் நன்றி கூற
விழா இனிதே நிறைவு பெற்றது
COMMENTS