முழு கொள்ளளவை எட்டி வரும் வைகை அணை...... 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
*வைகை அணை வேகமாக முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தேனி, மதுரை திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
COMMENTS