புதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு புழுக்கள் இருந்தால் அபராதம்... புதுக்கோட்டை நகராட்சி எச்சரிக்கை.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் உள்ள அனைத்து குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் லார்வா புழுக்களை அழிக்கும் பணி நகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையில் நகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணியின் போது லார்வா புழுக்கள் இல்லாததை உறுதி செய்து ஸ்டிக்கர் ஒட்டும் பணியும் நடந்து வருகிறது.
நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் போது அங்கு டெங்கு லார்வா புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டப் பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு)சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
COMMENTS