நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா
புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், சிவகாமி இரத்ததான கழகம் மற்றும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம் இணைந்து நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா புதிய பேருந்து நிலையத்தில் பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. நுரையீரல் சிறப்பு மருத்தவர் பி.தனசேகரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். சித்த மருத்துவர் சரவணன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்தவர் ஆர்.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழாவினை துவக்கி வைத்து கூறும் போது நிலவேம்பு குடிநீரை மகப்பேறு தாய்மார்கள் 15 முதல் 30 மில்லி அளவும், பால் கொடுக்கும் தாய்மார்கள் 30 மில்லி முதல் 60 மில்லி அளவும், 12 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகள் 2.5 மில்லி முதல் 5 மில்லி அளவும், 1-3 வயது உள்ள குழந்தைகள் 5 மில்லி அளவும், 3-5 வயது உள்ள குழந்தைகள் 5 மில்லி முதல் 7.5 மில்லி அளவும், 5 வயது முதல் 15 வயது வரை 7.5 மில்லி முதல் 15 மில்லி அளவும் இளம் வயதினர் 15 முதல் 30 மில்லி அளவும் மற்றவர்கள் 30 மில்லி முதல் 60 மில்லி வரை நிலவேம்பு குடிநீரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் அருந்தலாம். மேலும்; சர்க்கரை நோயை இது கட்டுப்படுத்தும் என்று கூறினார். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி.க.மோகன்ராஜ் வரவேற்றார். வி.என்.எஸ்.செந்தில், ஆர்.முத்துச்சாமி, ஜி.முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகாமி இரத்ததான கழகத் தலைவர் மெஸ்.மூர்த்தி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். நிறைவாக செயலாளர் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவில் பொதுமக்கள் சுமார் 800 பேர் பயன்பெற்றனர்.
புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், சிவகாமி இரத்ததான கழகம் மற்றும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம் இணைந்து நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா புதிய பேருந்து நிலையத்தில் பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. நுரையீரல் சிறப்பு மருத்தவர் பி.தனசேகரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். சித்த மருத்துவர் சரவணன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்தவர் ஆர்.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழாவினை துவக்கி வைத்து கூறும் போது நிலவேம்பு குடிநீரை மகப்பேறு தாய்மார்கள் 15 முதல் 30 மில்லி அளவும், பால் கொடுக்கும் தாய்மார்கள் 30 மில்லி முதல் 60 மில்லி அளவும், 12 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகள் 2.5 மில்லி முதல் 5 மில்லி அளவும், 1-3 வயது உள்ள குழந்தைகள் 5 மில்லி அளவும், 3-5 வயது உள்ள குழந்தைகள் 5 மில்லி முதல் 7.5 மில்லி அளவும், 5 வயது முதல் 15 வயது வரை 7.5 மில்லி முதல் 15 மில்லி அளவும் இளம் வயதினர் 15 முதல் 30 மில்லி அளவும் மற்றவர்கள் 30 மில்லி முதல் 60 மில்லி வரை நிலவேம்பு குடிநீரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் அருந்தலாம். மேலும்; சர்க்கரை நோயை இது கட்டுப்படுத்தும் என்று கூறினார். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி.க.மோகன்ராஜ் வரவேற்றார். வி.என்.எஸ்.செந்தில், ஆர்.முத்துச்சாமி, ஜி.முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகாமி இரத்ததான கழகத் தலைவர் மெஸ்.மூர்த்தி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். நிறைவாக செயலாளர் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவில் பொதுமக்கள் சுமார் 800 பேர் பயன்பெற்றனர்.
COMMENTS