HIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குதல்
புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் எச்.ஐ.வி உள்ளோர் நலச்சங்கம் இணைந்து ஏழைக்குழந்தைகளுக்கு இலவச தீபாவளி புத்தாடை வழங்கும் விழா மகாராணி சங்கத் தலைவர் கவிதா ராஜசேகரன் தலைமையில் கம்பன் நகர் இந்தோ அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தாரகை ரெடிமேட்ஸ் உரிமையாளர் கே.எஸ்.முகம்மது இக்பால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தாடைகளை வழங்கினார். மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.முன்னதாக வருகைபுரிந்து அனைவரையும் செயலாளர் வித்யா சிவா வரவேற்றார். பெண்கள் எச்.ஐ.வி உள்ளோர் நலச் சங்க நிர்வாகி பத்மினி விழாவினை ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் பானுமதி கண்ணன், கருணைச் செல்வி, இந்தோ அறக்கட்டளை மாவட்ட வளஅலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக சங்கப் பொருளாளர் ராணி கனகராஜன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவில் சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள புத்தாடைகளை சுமார் 125 எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளான பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் எச்.ஐ.வி உள்ளோர் நலச்சங்கம் இணைந்து ஏழைக்குழந்தைகளுக்கு இலவச தீபாவளி புத்தாடை வழங்கும் விழா மகாராணி சங்கத் தலைவர் கவிதா ராஜசேகரன் தலைமையில் கம்பன் நகர் இந்தோ அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தாரகை ரெடிமேட்ஸ் உரிமையாளர் கே.எஸ்.முகம்மது இக்பால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தாடைகளை வழங்கினார். மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.முன்னதாக வருகைபுரிந்து அனைவரையும் செயலாளர் வித்யா சிவா வரவேற்றார். பெண்கள் எச்.ஐ.வி உள்ளோர் நலச் சங்க நிர்வாகி பத்மினி விழாவினை ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் பானுமதி கண்ணன், கருணைச் செல்வி, இந்தோ அறக்கட்டளை மாவட்ட வளஅலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக சங்கப் பொருளாளர் ராணி கனகராஜன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவில் சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள புத்தாடைகளை சுமார் 125 எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளான பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
COMMENTS