ரோட்டரி மாவட்டம்- 3000 தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட கஜா புயல் நிவாரணப் பணிகள்
புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் கஜா புயலால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டதால் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் உளள் ரோட்டரி சங்கங்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவிதமான நிவாரணப் பணிகளை கடந்த 17.11.2018 முதல் தொடர்ந்து செய்து வருகின்றன. இதற்கான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை ரோட்டரி மாவட்ட ஆளுநர் சஎn.கண்ணன் ஆளுநர் தேர்வு டாக்டர் ஜமீர்பாஷா, மாவட்டத்தில் உள்ள சங்கங்கள், முன்னாள் ஆளுநர்கள் செய்து வருகின்றனர். இங்கு நிவாரணப் பணிகளை ஆளுநர் நியமனம் அ.லெ.சொக்கலிங்கம் தலைமையில் முன்னாள் ஆளுநர் ஜி.கோபால் அவர்களின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை சார்லஸ் நகரிலுள்ள கிங்டவுன் ரோட்டரி சங்க கட்டிடத்தில் அலுவலகம் அமைத்து 24 மணிநேரமும் செய்து வருகின்றனர். இதுவரை கீழ்க்கண்ட நிவாரணப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
குடிநீர் 15 லட்சம் லிட்டர்கள், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, சுற்றுப்பகுதி கிராமங்களில் வழங்கப்பட்டது.
55,000 மெழுகுவர்த்தி.
1,00,000 கொசுவர்த்திகள்.
800 குடிநீர் கேன்கள், 1000 பாட்டில்கள்
25,00,000 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள்.
3000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
காமராஜபுரம், மாலையீடு, சார்லஸ் நகரில் பணிபுரியும் மின் வாரிய பணியாளர் 200 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 4 பெரிய ஜெனரேட்டர்கள் இயங்கி வருகின்றன.
நமது மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனையின்படி பல பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
வடிகால் வாய்க்கால்கள் பெரிய பொக்லைன் கொண்டு தூர்வாரப்பட்டது. இதனால் பூங்கா நகர் பின் பகுதியில் தேங்கி நினற் கழிவுநீர், மழை நீர் வடிய வழி செய்யப்பட்டு, மேலும் தேங்காமல் செய்யப்பட்டது.
ரோட்டரி சங்க உறுப்பினர்களால் பல பகுதிகளிலும் விழுந்து கிடந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதைகள் சரிசெய்யப்பட்டன. மேலும் 15 மரம் அறுக்கும் இயந்திரங்கள் ரோட்டரி சங்கங்களால் பயன்படுத்தப்பட்டு, மரங்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
மினி லாரிகளில் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு பொது குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி கொடுக்கப்பட்டது.
ஒருங்கிணைந்து செய்யப்பட்ட மேலே கூறியுள்ள பணிகள் தவிர ஒவ்வொரு சங்கங்களும் தனித்தனியாகவும் பல்வேறு நிவாரணப் பணிகளை செய்து வருகின்றன.
55,000 மெழுகுவர்த்தி.
1,00,000 கொசுவர்த்திகள்.
800 குடிநீர் கேன்கள், 1000 பாட்டில்கள்
25,00,000 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள்.
3000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
காமராஜபுரம், மாலையீடு, சார்லஸ் நகரில் பணிபுரியும் மின் வாரிய பணியாளர் 200 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 4 பெரிய ஜெனரேட்டர்கள் இயங்கி வருகின்றன.
நமது மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனையின்படி பல பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
வடிகால் வாய்க்கால்கள் பெரிய பொக்லைன் கொண்டு தூர்வாரப்பட்டது. இதனால் பூங்கா நகர் பின் பகுதியில் தேங்கி நினற் கழிவுநீர், மழை நீர் வடிய வழி செய்யப்பட்டு, மேலும் தேங்காமல் செய்யப்பட்டது.
ரோட்டரி சங்க உறுப்பினர்களால் பல பகுதிகளிலும் விழுந்து கிடந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதைகள் சரிசெய்யப்பட்டன. மேலும் 15 மரம் அறுக்கும் இயந்திரங்கள் ரோட்டரி சங்கங்களால் பயன்படுத்தப்பட்டு, மரங்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
மினி லாரிகளில் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு பொது குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி கொடுக்கப்பட்டது.
ஒருங்கிணைந்து செய்யப்பட்ட மேலே கூறியுள்ள பணிகள் தவிர ஒவ்வொரு சங்கங்களும் தனித்தனியாகவும் பல்வேறு நிவாரணப் பணிகளை செய்து வருகின்றன.
COMMENTS