புதுக்கோட்டை: புதுக்கோட்டையில்
கஜா புயல் பாதித்த பகுதிகளில்
ரோட்டரி சங்கங்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் பாதிப்படைந்துள்ளன. அங்குள்ள மக்கள் உணவு, மின்சாரம்,
தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக
போராடி வருகின்றனர். பேரிடர்
மீட்புக்குழுவினர் சிறப்பாக மீட்பு பணியில் ஈடுபட்டாலும்
பொது மக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
இந்நிலையில்
புதுக்கோட்டையில் உள்ள ரோட்டரி சங்கங்கள்
மீட்பு குழுவினரோடு சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் விடுத்துள்ள செய்தி
குறிப்பில் ’’பேரிடர் மீட்புக்குழுவினர் சிறப்பாக
செயல்பட்டாலும் அவர்களோடு நாமும் இணைந்து நாம்
வசிக்கும் பகுதிகளில் மரங்களை நாமே அப்புறப்படுத்த
முன் வரவேண்டும். சமூக ஆர்வலர்கள், ரோட்டரி
சங்கங்கள் ரோட்ராக்ட் மாணவர்கள், அனைத்துக் கட்சியினர்கள், பொது அமைப்புகள் இணைந்து
நமது ஊரைக் காப்போம் நம்
மக்களுக்கு உதவ முன் வர
வேண்டும்’’ என அழைப்பு விடுத்துள்ளனர்.
அதேபோல
போஸ்நகர் மற்றும் வெட்டன் விடுதியில்பகுதிக்கு
இருபத்தி நான்காயிரம் கொள்ளலவு உள்ள குடிநீர் ரோட்டரி
சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.
மேலும்
ரோட்டரி சங்கங்கள் சார்பாக மீட்புப்பணியில் உள்ளவர்களுக்கு
உணவு தயார் செய்யும் பணி
துவங்கப்பட்டது.
கீழ மூன்றாம் வீதி தண்ணீர் இல்லாமல்
சிரமப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக தண்ணீர் லாரியை உடனடியாக
கமிஷனர் பொ ஜீவா சுப்பிரமணியன்
அனுப்பி வைத்தார். அவருக்கு ரோட்டரி சங்கங்கள் சார்பாக
நன்றி தெரிவிக்கப்பட்டது.
COMMENTS