பொன்னமராவதி பேருராட்சி நிர்வாகத்திற்கு நன்றி..
பொன்னமராவதி பேருராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக மாடுகள் நடமாட்டம் அதிகரித்தது. இதனால் பல்வேறு விபத்துக்கள் நடந்து உயிர் சம்பவமும் நடந்தது. இதனை கண்டித்து அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கையில் இந்த செய்தி வெளியானது..
உடனே பொன்னமராவதி பேருராட்சி நிர்வாகம் ரோட்டோரங்களில் சுற்றித்திரிந்த மாடுகளை மாட்டின் உரிமையாளர்கள் பிடித்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் மாட்டை பேருராட்சி நிர்வாகம் பிடித்து அபராதம் வசூலிக்கும் என முன் அறிவிப்பு விடுத்தனர். அதன் அடிப்படையில் நவம்பர் 1 இன்று பொன்னமராவதி பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்துள்ளனர்.
தற்போது பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் மாடுகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகம் இந்த செயலை அடிக்கடி கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
செய்திகள்.. கீரவாணி இளையராஜா செய்தியாளர் பொன்னமராவதி..
COMMENTS