பொன்னமராவதி அருகே வையாபுரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூர சம்கார விழா சிறப்பாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் கந்தசஷ்டி விழா தொடங்கி அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெற்று வருகிறது. அதன் படி தொடர்ந்து ஆறாம் நாள் விழாவாக கந்தசஷ்டி விழாவின் முக்கிய
நிகழ்வான சூரசம்ஹார விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்வினை கண்டுகளித்தனர். இவ்விழாவில் முருக பக்தர்கள், விழா உபயதாரர்கள், கோவில் குருக்கள் உள்ளிட்ட சுற்றுவட்டார ஏராளமான ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
COMMENTS