பிரச்சனை தீர்ந்தது: திரும்பி வரப் போகும் வடிவேலு
சென்னை: வடிவேலுவுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாம். இதையடுத்து வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் மீண்டும் நடிக்கப் போகிறாராம்.
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை சிம்புதேவன் இயக்க வடிவேலு ஹீரோவாக நடித்தார். ஷங்கர் தயாரித்த இந்த படத்திற்காக ரூ. 6 கோடியில் செட் போடப்பட்டது.
இடையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்றது. இதையடுத்து பிற படங்களில் நடிக்க வடிவேலுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மதுரையில் இருக்கும் வடிவேலு சென்னைக்கு வந்து இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம். படப்பிடிப்பை ஜனவரி மாதம் துவங்க சிம்புதேவன் திட்டமிட்டுள்ளாராம்.
வடிவேலு இனி நடிக்கவே மாட்டாரா, அவரை திரையில் பார்க்க மாட்டோமா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. விரைவில் வடிவேலுவை மீண்டும் பெரிய திரையில் பார்க்கலாம். அவர் இல்லாமல் உருவாகியுள்ள வெற்றிடம் இனி இருக்காது. வாங்க வடிவேலு, திரும்பி வாங்க.
COMMENTS