கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா
வந்தவாசி இந்திய மருத்துவ சங்கம் ரோட்டரி மாவட்டம் 3132 ரோட்டரி மாவட்டம் நகரம் 3231 லயன்ஸ் கிளப்ஸ் மாவட்டம் 324யு4 லயன்ஸ கில் டவுன் 324யு4 புதுக்கோட்டை மணிகண்டன் வேளாங்கன்னி ஈஸ்வர் குழுவினர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறை மாணவர்கள் இணைந்து கறம்பகுடி ஒன்றியம் முத்தாணிப்பட்டியில் பொது மக்களுக்கு கொசுவலை,சோலார் விளக்கு, போர்வை, உணவுப்பொருட்கள்,அரிசி, மளிகைபொருட்கள், சேலை, துண்டு, கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, சேமியா, நோட்டுபுத்தகம், தார்ப்பாலின் உள்ளிட்;டபொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வந்தவாசி மருத்துவர் பிரபு, மற்றும் குமார் அல்லா பாஸ்கான்,தேவதாஸ், மோகன்ஆனந்த் கோபிநாத் ராஜா சீனிவாசன,; தேவசேனா, குமார், குழுவினர்கள் தலைமையில் நிவாரணப்பொருட்கள் கொண்டுவந்தனர். நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவை சாலை விபத்து; தடுப்பு மற்றும் மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் புதுக்கோட்டை எஸ்.மணிகண்டன் கந்தர்வகோட்டை ஆ.மணிகண்டன் கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி ஆணையர் (ஓய்வு) மணிசேகர் எம்.அரவிந்த் ஆகியோர் இணைந்து வீட்டுக்கு வீடு சென்று நிவாரணப்பொருட்களை வழங்கினார்கள் இந்தப்பகுக்கு இதுவரை நிவாரணப்பொருட்கள் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS