மேட்டூர் நீர்மட்டம் 73 அடியாக சரிவு
மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது. மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழையால், ஓரளவு தண்ணீர் வந்து ண்டிருக்கிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 86 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 118 கனஅடியாக உயர்ந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 4,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 73.50 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 73.09 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 35.41 டிஎம்சியாக உள்ளது.
COMMENTS