*📌📌தமிழகத்தை கலக்கப்போகும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி.*
*📍தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு C.விஜயபாஸ்கர் அவர்களால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்தியாவிலேயே மிகப்பெரிய ஜல்லிகட்டு போட்டியாகும்.*
*📍மேலும் அதிகமான பரிசுப் பொருள்களை வழங்க போகும் போட்டியாக இது*
*திகழப்போகின்றது.*
*📍முதல் பரிசாக மூன்று மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த மாடுகளுக்கு காரும்(சிப்ட்), 25 நபர்களுக்கு ஒன்றரை லட்சம் மதிப்புள்ள புல்லட்(இரண்டு சக்கர ) வாகனமும், கலந்துகொள்ளும் அனைத்து மாடுகளுக்கும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் நிச்சய பரிசுகளும் வழங்கப்படுகின்றன.*
*📍அதுமட்டுமல்லாமல் தங்ககாசு, வெள்ளி காசு, எவர்சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், கிரைண்டர், ஏசி, மின்விசிறி, ஏர் கூலர் போன்ற எண்ணற்ற எலக்ட்ரானிக் சாதனங்களும் இங்கு பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.*
*📍இந்த போட்டியை காண வெளிநாட்டில் இருந்து 250'க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள இருக்கின்றனர்.*
*📍மேலும் இந்த போட்டி கின்னஸ் சாதனை செய்யபடுவதால் மூன்று வெளிநாட்டு நடுவர்களும் வர இருக்கின்றனர் .*
*📍இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் இருக்கின்ற முன்னணி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.*
*📍வருகின்ற 20'ஆம் தேதி நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்திய அளவில் மிகப்பெரிய பரிசுகளை வாரி வழங்கும் ஜல்லிக்கட்டு போட்டியாக அமைய இருக்கிறது.*
*📍மேலும் இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 2500 காளைமாடுகள் பங்கு பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன. அனைத்து வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 20'ஆம் தேதி நடைபெற இருக்கின்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்புக்கு புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி, கரூர் மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்படுகின்றனர்*
*📍விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அன்று விராலிமலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன.*
*📍திருச்சி சரக டிஐஜி அவர்களின் தலைமையில் 4'மாவட்டத்தை சேர்ந்த எஸ்பிகள், 25 டிஎஸ்பிக்கள், 50 இன்ஸ்பெக்டர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய இருக்கின்றனர்.*
*📍மேலும் கலந்துகொள்ள இருக்கின்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கப்பட இருக்கின்றன.*
*📍மொத்தத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 20ஆம் தேதி விழா கோலம்மாக அமையப் போகிறது .*
*📍போட்டியை காண வரும் அனைவருக்கும் அருசுவை உணவு வழங்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.*
*📍ஒவ்வொறு மணி நேரத்திற்கும் பார்வையாளர்களுக்கு மோர், ஜீஸ் வழங்க 250 பேர் நியமிகப்பட்டு உள்ளனர் .*
*📍மாடுகளுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .*
*📍தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து மாவட்டத்திலிருந்தும் காளைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர் மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு எல்கை தூரம் வகுக்கப்படுகின்றன அந்த தூரத்திற்குள் எவ்வளவு நிமிடங்கள் மாடுகள் விளையாடுகின்றன அதில் அதிகமான நேரம் விளையாண்ட மாடுகளுக்கு சிறப்பு பரிசுகளும் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளை ஒருவர்கூட தொடமுடியாத மாடுகளுக்கு சிறப்பு பரிசுகளும் என நடுவர்கள் குழு மட்டுமே சுமார் 75 குழுக்கள் இங்கே நியமிக்கப் பட்டுள்ளனர். தமிழ் நாட்டிலேயே அதிகமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும்.*
*📍புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 518 வாடி வாசல்கள் உள்ளன.*
*📍தமிழ் நாட்டில் எந்த மாவட்டத்திலும் இது போன்ற எண்னிகையில் வாடிவாசல் கிடையாது . மேலும் வரக்கூடிய இரண்டு மாதங்களில் மிக அதிகமான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் நடத்தப்படும் என்பது புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது .*
*📍10 மாநில அமைச்சர்கள்.,*
*40 MLA'க்கள்*.,
*15 MP'க்கள் கலந்துகொள்ள இருக்கின்றார்கள் .*
COMMENTS