குடியரசு தினவிழா
வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை மற்றும் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து குடியரசு தினவிழா அலுவலக மேலாளர் ஆர்.அன்னபூரணி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி வரவேற்றார். அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து விழா பேருரையாற்றினார். சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூறு சதவிகித பயிற்சிப்பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துரை வழங்கினார். கோடீஸ்வரா எஸ்.அழகப்பன் விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு எதிர் கால சிந்தனை என்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சி அலுவலர்கள் ஆர்.ராஜேந்திரன், பி.மனுவேல் ஜேசுராஜ் முன்னிலை வகித்தனர் மற்றும் கே.என்.செல்வரெத்தினம,; பயிற்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் 400 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக விளையாட்டு பயிற்சி அலுவலர் வி.கதிரேசன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
COMMENTS