முதல் தேர்தலில் வாக்களித்தவர்: 17-வது மக்களவைத் தேர்தலிலும் வாக்களிக்கும் 101 வயது முதியவர்
இமாச்சலபிரதேச மாநிலம் கின்னாவூர் மாவட்டம் கல்பா நகரைச் சேர்ந்த முதியவர் ஷியாம் சரண் நேகி. 1917-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தவர். பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது இவருக்கு 101 வயது நிறைவடைந்துள்ளது.
1951-ம் ஆண்டு நடந்த மக்களவைக்கான முதல் தேர்தலில் ஷியாம் சரண் நேகி வாக்களித்தார். அப்போது அவருக்கு வயது 33. இதுவரை எந்த தேர்தலிலும் அவர் வாக்களிக்காமல் இருந்தது இல்லை. ஷியாம் சரண் நேகிக்கு 100 வயதானபோது கடந்த 2017-ம் ஆண்டு இமாச்சலபிரதேச சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்தது. அந்த தேர்தலிலும் அவர் வாக்களித்தார். வரும் மக்களவைத் தேர்தல் இமாச்சலில் மே 19-ம் தேதி நடக்க உள்ளது. இப்போது 101 வயது முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில், இந்த மக்களவைத் தேர்தலிலும் அவர் வாக்களிக்க இருக்கிறார்.
COMMENTS