நாம் தமிழர் கட்சி சின்னத்தை வெளியிட்ட சீமான்!
கடந்த தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. இந்த முறையும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்குமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். ஆனால் அந்த சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
அதனால் விவசாயம் சம்பந்தமான சின்னத்தை வழங்குமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் கரும்பு விவசாயி சின்னத்தை சீமான் வெளியிட்டார்.
பின்னர் பேசிய சீமான், வரும் மக்களவை தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என்றார். வரும் 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கட்சியின் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
COMMENTS