பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்களில் 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.64% மாணவிகள் மற்றும் 88.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் கல்வி மாவட்டம் 95.37% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 95.23% தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் 95.15% தேர்ச்சி பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘தேர்வு எழுதிய ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் வாழ்த்துக்கள். இதுவே முழுமையான வெற்றி. இவ்வெற்றி தொடரட்டும். உங்களுக்குப் பிடித்ததையும் எந்தத் துறையில் நீங்கள் திறமையானவர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதிலும் கவனம் செலுத்துங்கள். நாளை நமதே என்கின்ற நல்வாழ்த்துக்களுடன் உங்கள் நான்’ எனக் கூறி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
COMMENTS