அரசு உயர் நிலைப்பள்ளி மிரட்டுநிலை!!
2019-20 ஆம் கல்வியாண்டு மாணவர்சேர்க்கை முகாம்!! 2019 -2020 ஆம் கல்வியாண்டிற்கான ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கைக்கான துண்டு பிரச்சார விழிப்புணர்வு முகாம் மிரட்டுநிலை உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள உப்புப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கடையக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொன்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மிரட்டு நிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , ஓனாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,சீகம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மற்றும் வன்னியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கு.திராவிடச் செல்வம் தலைமையில் மிரட்டுநிலை பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்டது அதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கடையக்குடியில் நடைபெற்ற புதிய மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விழிப்புணர்வு துண்டுப் பிரச்சாரத்தை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார் கடையக்குடி தலைமையாசிரியை பேச்சியம்மாள் மிரட்டுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கணபதி, பிரபா ,சீனிவாசன், இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்
COMMENTS