PSLV - C45 ஒரு பார்வை.
Pslv c 45 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
29 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவவிருக்கிறது. பொதுவாக ஒரு ராக்கெட் 4 அடுக்குகளைக் கொண்டிருக்கும். அதன் உச்சியில் செயற்கைக் கோள்கள் வைக்கப்பட்டு heat shield களால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு அடுக்காக எரிந்து கீழே விழுந்துவிடும். நான்காவது அடுக்கு செயற்கைக் கோள்களை புவிவட்டப் பாதையில் செலுத்திவிட்டு அதுவும் கீழே விழுந்துவிடும்.
இந்த ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடத்தில் 749 கி.மீ உயரத்தில் ராணுவ செயற்கைக் கோளான EMISAT ஐ செலுத்திவிட்டு மீதமுள்ள 28 செயற்கைக் கோள்களையும் சுமந்துகொண்டு பூமியை ஒரு முறை வலம்வந்து 504 கி.மீ உயரத்தில் மீதமுள்ள 28 செயற்கைக் கோள்களையும் செலுத்தும். பிறகு கீழே விழுந்து விடாமல் 485 கி.மீ உயரத்தில் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொண்டு lithium battery உதவியுடன் 6 மாதம் பூமியை வலம் வந்து கொண்டிருக்கும். இந்த நான்காவது அடுக்கைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த புதுமையான தொழில் நுட்பம் C44 லிலும் கடைபிடிக்கப்பட்டது.
COMMENTS