சர்வதேச சைக்கிள் தினம்!
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியின் சார்பாக சர்வதேச சைக்கிள் தினம் பள்ளி தலைமையாசிரியர் சோ.விஜய மாணிக்கம் தலைமையில் கொண்டாட பட்டது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கூறும்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மூன்றாம் தேதி சர்வதேச சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது எனக்குத் தெரிந்து வரையில் முதன் முதலில் இருசக்கர வாகனம் என்பது சைக்கிள் மட்டுமே சைக்கிள் ஓட்ட தெரிந்தால் இருசக்கர மோட்டார் வாகனங்களை சுலபமாக இயக்க முடியும் ஒரு காலத்தில் எல்லோராலும் சுலபாக பயன்படுத்தக்கூடிய பொருளாதார வசதிக்கேற்ற எளிதாக நிறுத்தும் வசதியான வாகனம் என்று பார்த்தால் சைக்கிள் மட்டுமே மேலும் சைக்கிள் உடற்பயிற்சிக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், பொருளாதார சிக்கனத்தை கடைபிடிக்கவும், பெரிதும் உபயோகமானதாகவும், எரிபொருள் சிக்கனத்திற்காக சைக்கிளை உபயோகப் படுத்துவது சிறந்தது என்றார் தினமும் காலை வேளையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்தால் உடல் ஆரோக்கியத்தோடு வாழலாம் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் லெஸ்ஸெக் சிப்லிஸ்கி என்பவர் சர்வதேச சைக்கிள் தினமாக கொண்டாடப் பாடுபட்டவர் அதுவே சைக்கிளைப் பற்றிய விழிப்புணர்வுக்கு குறிப்பிடத்தக்கது என்றார் பள்ளி மாணவர்கள் அனைவரும் இணைந்து அவர்கள் உபயோகப்படுத்தும் சைக்கிள்களை சுத்தம் செய்து பூஜை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது நிகழ்ச்சியில் வி .ஆர் .எம். தங்கராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்
COMMENTS