மொபைல் உற்பத்தியில் இந்தியாவின் அதீத வளர்ச்சி..
இந்தியாவில் பயன்படுத்தப்படும் 95 சதவீதம் மொபைல் போன்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் மொபைல் உற்பத்தி துறை பெரியளவில் வளர்ந்துள்ளதாகவும் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் அத்துறையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் 2 மொபைல் உற்பத்தி மையங்கள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது 268 மொமைல் மற்றும் அதன் மூல பொருட்கள் உற்பத்தி மையங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் சீனாவுக்கு பிறகு இத்துறையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான உள்நாட்டு மொபைல் உற்பத்தியின் மூலம் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களின் மூலம் இந்த வளர்ச்சி நடைபெற்றுள்ளதாகவும், இதனால் கடந்த சில ஆண்டுகளில் உத்தரபிரதேச மாநிலம் மொபைல் உற்பத்தியில் முக்கிய இடமாக மாறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS