*வானிலை முன்னறிவிப்பு*
*கடலோரபகுதிகளில் பிப்ரவரி 11,12ல் லேசான மழை வாய்ப்பு..!!*
==> தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் வறண்ட வானிலை தொடரும்.
==> பிப்ரவரி 10ம் தேதி இந்தியப்பெருங்கடலின் நிலநடுக்கோடு அருகே உருவாகும் காற்று சுழற்சி ஈரப்பதமான கீழைக்காற்றை தமிழகம் ஊடாக பிப்ரவரி 11,12 ஆகிய தேதிகளில் ஈர்க்கும் என்பதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான #சென்னை #காஞ்சிபுரம் #செங்கல்பட்டு #கடலூர் #புதுச்சேரி #காரைக்கால் #நாகப்பட்டினம் #திருவாரூர் #தஞ்சாவூர் #இராமநாதபுரம் #நெல்லை #தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஒரிரு இடங்களில் பிப்ர 10ம் தேதி இரவு முதல் பிப்ர 12ம் தேதி இரவுக்குள் லேசான/மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
==>பிப்ரவரி 11,12 ஆகிய தேதிகளில் வெயில் அடித்தாலும் திடிரென கருமேகங்கள் சூழ்ந்து தூறல்/நனைக்கும் மழை வாய்ப்பு.
*#மீனவர்களுக்கான அறிவிப்பு!*
==> கடலில் தரைக்காற்று சற்று பலமாக வீசும் என்பதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் விசைப்படகு, நாட்டு படகு மீனவர்கள் பிப்ரவரி 11,12,13 ஆகிய தேதிகளில் சற்று கவனத்துடன் மீன்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
*#அறுவடை விவசாயிகள் கவனத்திற்கு!*
==> பிப்ரவரி 11,12 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பரவலான மழைக்கோ அல்லது சற்று கனமழை/கனமழை பெய்வதற்கோ வாய்ப்புகள் இல்லை. அதனால் அறுவடை பணிகளோ, நெற்பயிர்களையோ இம்மழை பாதிக்குமோ என கவலைக்கொள்ள வேண்டாம். அறுவடை பணிகளை அச்சமின்றி தொடரலாம்.
==> வெயில் அடிக்கும் ஆனால் கருமேகங்கள் அவ்வப்போது திறண்டு லேசான தூறல்/நனைக்கும் மழை 5 முதல் 10 நிமிடங்கள் கடலோரத்தில் ஒரிரு இடங்களில் தர மட்டுமே வாய்ப்பு. விவசாயிகள் வானிலை மாற்றத்தால் குழப்பமடைய கூடாது என்பதற்காகவே இத்தகைய அறிக்கை வெளியிடுகிறேன் மற்றபடி பெரிய அளவில் மழை வாய்ப்பு இல்லை.
COMMENTS