2 கி.மீ தூரம் மட்டுமே செல்ல வேண்டும் - திருச்சி மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
திருச்சி மாநகரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதாக கூறிக் கொண்டு சிலர், பல்வேறு இடங்களில் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்துவதற்காக, தங்களது வீட்டில் இருந்து 1 கி.மீ தூரத்துக்குள் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ நேற்று உத்தரவிட்டிருந்தார். சில பகுதிகளில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்குள் கடைகள் இல்லை எனவும், இந்த தூரத்தை சிறிது நீட்டித்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இந்த சூழலில் திருச்சி மாநகர பகுதிகளில் வசிப்போர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இன்று உத்தரவிட்டுள்ளார்.
COMMENTS